படம் பார்த்து துளிர்த்தது துளிப் பா +++++++++

இளகியது பாறை
நிழல் கொடுத்தது
மரம்.
_/
மரம் உலகின் வரம்
பாறைக்கு புரிந்தது
மனிதர்க்கு.....?
_/
வீரியமுள்ள விதைக்கு
அனைத்தும் விளை நிலமே.
_/
போராளிகள் வேர்கள்
இலைகள் அரசியல்வாதிகள்.
_/
கல்லான இதயத்தில்
காதல் (க)விதை
விருட்சம்.
_/
வந்தாரை வாழவைத்து
தன் இருப்பை இழக்கும்
தமிழனாய் பாறை.
_/_/ _/

எழுதியவர் : கனகசபாபதி செல்வ நேசன் (31-Mar-17, 11:44 am)
பார்வை : 204

மேலே