அகலிகையின் சாபம்

தவறு செய்தவன்
இந்திரன்தானே
நீ எப்படி எனக்கு
சாபம் கொடுப்பாய்
மனைவியின் கற்புக்கு
பங்கமெனில் அதை
அறிய முடியாதவன்
அருந்தவ முனிவனா
என்னைக் காப்பாற்ற தவறிய
தவ வலிமை உனக்கு
பயன்படாது போகட்டும்
பெண்மையை இழிவு படுத்திய
இந்திரனின் ஆண்மை
அழிந்து போகட்டும்
இரட்டை சாபமிட்டு
மீண்டும் கல்லானாள் அகலிகை

எழுதியவர் : லட்சுமி (1-Apr-17, 11:21 am)
சேர்த்தது : Aruvi
Tanglish : agalikaiyin saabam
பார்வை : 1711

மேலே