கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
கனி காண் கனி காண்
என்றாள் அன்னை
சாளரத்தின் கதவினைத் திறந்தேன் !
கனியாய் கற்பக மலராய்
பொன்னாய் புதுத் தென்றலாய்
புலரும் பொழுதாய் நீ நின்றாய் !
கனி காணடா கனி காணடா
என்று மீண்டும் அன்னை சொல்கிறாள் !
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
எல்லாம் கண்டுகொண்டேன் அம்மா என்றேன் !
----புத்தாண்டு வாழ்த்துக்களுடன் கவின் சாரலன்