கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

கனி காண் கனி காண்
என்றாள் அன்னை
சாளரத்தின் கதவினைத் திறந்தேன் !

கனியாய் கற்பக மலராய்
பொன்னாய் புதுத் தென்றலாய்
புலரும் பொழுதாய் நீ நின்றாய் !

கனி காணடா கனி காணடா
என்று மீண்டும் அன்னை சொல்கிறாள் !

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
எல்லாம் கண்டுகொண்டேன் அம்மா என்றேன் !

----புத்தாண்டு வாழ்த்துக்களுடன் கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Apr-17, 8:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

மேலே