தங்கையல்ல தாயிவள்

என் வானில் முளைத்த
ஒற்றை நிலவே...

உன் பாச ஒளி பட்டு
நாளும் நீளும் விடியல் நான்...

என் கூட்டில் கீச்சிடும்
என் மனக்கிளியே..

உன் மொழியே கேட்டு
வேகுதடி என் ஞாபக பக்கங்கள்...

என்னோடு தோல்வியுறுதில்
பலமுறை வென்றவளே....

உன்னை வெல்ல முடியாதடி
என் இளையவளே...
இதயமிலகியவளே...

தாயுள்ளம் ஒன்றில்தான்
காருண்யம் கரையெழுமாம்
என் தாயும் நீதானோ....?
எத்தவமீந்த வரந்தானோ..?

ஒரு தாயின் கருவானோம்...
இப்பிறவி உறவானோம்...

பந்த பாசக் காட்டுக்குள்ளே
பச்சைக் கிளிகளென்றானோம்...

வான் சுமக்கும் மழை நீரில்
மேகங்கள் கரைந்திடுமாம்...

ஊன் சுமக்கும் உயிர் நீரில்
நாமும் கலந்தே பிறந்தோமே.....

தங்கையல்ல தாயடி நீ....

பாய்மரமானாய் பலமுறை நீ...

என்னாசைகளில் உன்னாசை மறந்தவளே....

அப்பா வாங்கித் தரும்
அஞ்சு ரூபாய்
பஞ்சு மிட்டாயையும்
எனக்காய் பங்கிட்டவளே....

நம் கால்சட்டை காலங்கள்
நினைக்கையில்
எனக்கே பலமுறை சந்தேகங்கள்...

நீயெனக்கு தங்கையா தாயா என்று...

அகவையில் பிந்தினாலும்
அன்பினால் எனை முந்தியவளே...

இறந்த காலமது இரக்கம்
காட்டினால்....

உன்னிடத்தை எனதாக்குவேன்....

உன் ஏமாற்றங்கள் எனுலேற்றுவேன்...

எதிர்கால கீற்றுகளில்...,,,
உன் சாலரமோர சாரலாகுவேன்
உன் பாரம் யான் சுமப்பேன்
இலையேனும்..
சுமையாகாதிருப்பேன்!!!

உன் நிழற்குடையுள் மழையாகி
உனை நனைத்தே நெகிழ்ந்திருப்பேன்
என்றென்றும்.....!!!

சிவனிறைச்செல்வி

எழுதியவர் : சிவனிறைச்செல்வி (15-Apr-17, 8:36 pm)
சேர்த்தது : Sivaniraichelvi
பார்வை : 3493

மேலே