கவிதை சமையல்

ஆசை மனம் கொண்டு அடுப்படி வந்தது
என் நினைவென்னும் நெல்மணியாம்
அதில் காதல் நீர் இறைத்து

இரு மனம் கலந்த இல்லறம் தனில்
மல்லிகை பூவாம் எங்கள்
மனம் போல் சாதம் சமைத்து

பொறுப்பாய் புளி கரைத்து
சிறிது சிறிதாய் உன்னுள்
கலந்தார் போலும் உப்பு கரைத்து

அக்கறையாய் பெருங்காயம் தூவி
அழகாய் ரசம் சமைத்து வைத்தேன்
என் மனம் போல் ஏங்கும் என் சமையலும்

.............. உன் வருகைக்காக.....

எழுதியவர் : (8-Jun-17, 3:32 pm)
சேர்த்தது : padmavathy9
Tanglish : kavithai samayal
பார்வை : 99

மேலே