கவிதை

உங்கள் நண்பன் பிரகாஷின்
200 ம் படைப்பு....

~~~கவிதை~~~

காதல் வந்த நெஞ்சில்
கனவுகள் என்றும் கவிதை...!

புண் பட்ட நெஞ்சில்
வலிகள் என்றும் கவிதை...!

தாலாட்டு பாடும் தாயின்
கீதம் என்றும் கவிதை...!

அன்பு தந்தை கூறும்
அறிவுரை என்றும் கவிதை...!

மகான்கள் சொல்லும் சொல்லில்
கருத்துகள் என்றும் கவிதை...!

தென்றல் வீசும் காற்றில்
தேகம் என்றும் கவிதை....!

பேசும் அழகு பேச்சில்
மொழிகள் என்றும் கவிதை...!

உயிர் வாழும் மூச்சில்
உணர்வுகள் என்றும் கவிதை...!

துடிக்கும் எந்தன் ஹார்டில்
லப்டப் ஓசை கவிதை....!

(கவிதை ஒன்றை எழுதி...!

கற்றேன் நானும் கல்வி....!

இது தான் கலையின் செல்வி...!

பிறகு உணர்ந்தென்...! தழுவி )

வாழும் வாழ்க்கையை வர்ணிக்க...
வேண்டும் வேண்டும் கவிதை...!

பாசம் வேஷம் நேஷம்
என்றும் சொல்லும் கவிதை...!.

எட்டுத்திசையில் என்றைக்கும்
உதிக்க வேண்டும் கவிதை...!

நிகழ் எதிர் காலத்தை
என்றும் வெல்லும் கவிதை...!

உயிர் உடல் ஆவி
மூன்றிலும் இருக்குமே...! கவிதை

உலகம் முழுதும் என்றுமே!
ஆட்டி படைக்குமே...! கவிதை

கருவறையில் நீயும் பிறந்து...!
கல்லறை செல்லும் வரை...!

என்றும் பிறக்கும் கவிதை...!
எதையும் வெல்லும் கவிதை...!

Timepass writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (14-Jun-17, 8:01 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : kavithai
பார்வை : 179

மேலே