நிறம் மாறும் மேகங்கள்

சோலைவனம் வெயிலினால் கருகிடும் சோகத்தில்
நீலவானம் விழிகள் திறந்து வேகத்தில்
கார்முகிலாய்த் திரண்டு பொழியும் மழையில்
பார்மீது பசுமையாய் மலர்ந்திடும் பூவினங்கள்...


மண்ணில் விரிந்திடும் மடமைகள் பார்த்தே
கண்ணில் வழிந்திடும் கருணையும் வேர்த்தே
கன்னலாய் இருந்தாலும் கனலாய் எழுந்ததை
மின்னற் பொழுதில் விரட்டிடும் முகங்கள்...


ஆசையின் உச்சத்தில் அடுத்தவர் வாழ்வில்
நாசங்கள் செய்தே நலமாய் வாழ்வோரை
ஆழியின் அலையென சினந்து பொங்கியே
மேழியால் நெஞ்சம் பிளந்திடும் கரங்கள்...


மதுவின் வாசத்தில் மதியும் மயங்கியே
மதுகரமாய்க் கொட்டிடும் மொழிகளும் பேசுவோர்
மகள்களின் பாசத்தில் மறுமை அடைந்தே
யுகத்தைக் கடந்திடும் தந்தைகளின் இதயங்கள்...

எழுதியவர் : இதயம் விஜய் (17-Jun-17, 10:56 am)
பார்வை : 659

மேலே