புயல்

புறப்பட்டு விட்டதோ புதிய புயலே
பயப்பட்டு விட்டதோ மனித மனமே
செயல்பட்டு இருக்குமானால் ஆண்ட தலைமைகள்
காக்கப்பட்டு இருக்கும் போன உயிர்களே...

அலட்சியப் போக்காலே பலவித இழப்புகளே
அலசித்தான் பேசிடுவோம் செயல்களிங்கே ஒன்றுமில்லை
வெட்டிப்பேச்சு பேசிப்பேசி நேரத்தைப் போக்கிடுவோம்
வெற்றிப்பேச்சு பேசுவோரை ஏறெடுத்தும் பார்க்கமாட்டோம்

வந்த வெள்ளமது அள்ளிக்கொண்டு போனதுவே
சொந்த மக்களைத்தான் தூக்கிக்கொண்டு போனதுவே
மீண்டும் அதுபோலே ஏதும் வேண்டாமே
ஏரி குளம்விடுவோம் நீர்நிலைக்கு வழிதருவோம்

பள்ளிக்கு விடுமுறைதான் சுட்டியெல்லாம் துள்ளுதடி
வீதிகள் வெறுச்சோடி மழைநீரோ குதித்தாடி
சேற்றின் கறைபட்டே சாலையில் செல்லுகின்றேன்
புயல்செய்த திருவிளையாடல் காலைவந்து சொல்லுகின்றேன்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Jun-17, 11:24 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 1299

மேலே