பொய்க்கோபம்

தூரமாய் தெரிந்தாலும்
அருகில்தான்
சிரிக்கிறாய்

மௌனமாய் இருந்தாலும்
மனதோடு
பேசுகிறாய்

வெறுப்பதுபோல் நடித்தாலும்
நேசத்தில்
திளைக்கிறாய்

அன்பின் மழைகொண்டு
ஆன்மாவை
நனைக்கிறாய்

மறப்பதாய் சொல்லிக்கொண்டு
இதயத்தால்
கரைகிறாய்

என்னைவிட்டு...

விலகுவதாய் நினைத்துக்கொண்டு
இரண்டறக்
கலக்கிறாய் !

## மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (2-Jul-17, 5:59 pm)
சேர்த்தது : மதிபாலன்
Tanglish : poikkobam
பார்வை : 215

மேலே