நுட்பக் காரணங்கள்

நுட்பக் காரணங்கள்...
******************************

எல்லாக் காரணங்களும்
சேர்ந்து கொண்டன...

அத்தனை பிணைப்பு
என்ன ஆனது என்றே
தெரியவில்லை...

அவிழ்க்க முடியாத,
வேண்டாத
என்பதைப் போலொரு
மாயம், வலை செய்கிறது...

கண்ணியம் என்று அவர்களாகவே
நம்பிக் கொள்வதில்
கசிந்துருகிய அணைத்தலும்
புணர்தலும் காண காண
மறைந்திருக்கிறது...

வாரம் ஒருமுறையாவது
தாமதமாக குளித்து வருவதை
போதுமானதாக நம்புகிறார்
அவர்......

பாட்டி என்ற சொல்லோடு
நரைத்துக் கிடக்கும் அவள்
விரைத்துக் கிடப்பது சுவர்
அறியா சித்திரம்.....

சரி...

தாழ்பாள் இல்லாத
கதவு போதுமானது என்று
யார் முடிவு செய்தது
50க்கு பிறகு....!


கவிஜி

எழுதியவர் : கவிஜி (4-Jul-17, 2:46 pm)
பார்வை : 189

மேலே