எங்கே செல்கிறது என் தமிழ் பூமி

இயற்கை வளம் நிறைந்த என் மண்ணில்!
இன்று செயற்கை தான் வாழ்கிறது என் கண்ணில்!
பசுமை பொங்கிய என் வளநாட்டில் இன்றோ
தெற்கே அனுஉலை கிழக்கே எண்ணெய் குழாய்!
யாரோ வளர யாரோ வாழ -என் மண்ணின் வாழ்வை அடைமானம் வைத்தது யாரோ!
கூடங்குளமும் கதிரமங்கலமும் மெரினாவுமாய் நம் கண்ட களங்களாக!
மீட்டெடுப்போம் நம் மண்ணை நாளைய தலைமுறை வாழ!!

சுயநலவாதிகள் நிறைந்த உலகம் -இங்கே மொழி பற்றும் இல்லை இனபற்றும் இல்லை!
சாதி பற்று மட்டும் உண்டு- அதுவும் தாழ்ந்தவனை நிமிராமல் அடிமை கொள்ளவும் காதல் மனங்களின் உயிரை பறிப்பதுமாய்!!
இனியாவது புதுவிதி செய்வோம் தமிழனாய் நாமும் வாழ!!!
-இரா.வைகுந் பாரதி

எழுதியவர் : இரா.வைகுந் கிருட்டிணன் (13-Jul-17, 11:06 am)
பார்வை : 332

மேலே