என்னவன்

அவனுக்காக மனம்திறந்தேன்
அவனுக்காக காத்திருந்தேன்
அவனுக்காக கண்விழித்தேன்
யார் அவனென்று உணர்ந்துகொண்டேன்
என் காதல் அவனென்று தெரிந்து கொண்டேன்

என்னருகில் அவனில்லை
அவன் அருகில் நானும் செல்லவில்லை
இருந்தபோதும் பிரிவினை என்பதும் இங்கில்லை

கண்களினால் பேசவைத்தான்
மௌனத்தை எனக்கு பரிசளித்தான்
பாதை எங்கும் தொடர்ந்திருப்பான்
கைகள் சேர கதை படைப்பான்

என் தாயின் அன்பை தந்திடுவான்
என் தந்தையின் சாயலை தோன்றவைப்பான்
சிறுபிள்ளையை போல அடம் பிடிப்பான்

காதலில் என்னை களவு செய்வான்
பேர் சொல்லும்போதும் இனித்திடுவான்
மோகத்தில் என்னை மூழ்க செய்வான்
மனதில் கலந்து நிறைந்திருப்பான்

எழுதியவர் : (14-Jul-17, 4:48 pm)
சேர்த்தது : magilini
Tanglish : ennavan
பார்வை : 384

மேலே