என் கவிதைக்கு வாழ்த்துகள்
உனக்கான எண்ணங்களே
என் கவிதைகளில்
வழியும் வண்ணங்களாய்!..
என் பேனா 'மை'யில்
உயிர்ப்பை நிரப்பி
நான் மௌனம்
கொண்ட போதிலும்
என் எழுத்துகளுக்கு
பேசக் கற்பித்து
வரிகளையெல்லாம்
சுவாசிக்க பயிற்றுவித்த
உயிர்க் கவிதையுனக்கு
கவிதைகள் தினத்தில்
வாழ்த்துகள் அன்பே..!
21.03 .2017