உன் மடியில் நான்
உன் மடியில் நான் குழந்தையாய் சாய்ந்திட வேண்டும்
உன் அடியில் நான் குழலியாய் வீழ்ந்திட வேண்டும்
உன் முடியை நான் சேர்த்திடும் முடிச்சாகிட வேண்டும்
உன் கொடியை நான் தாங்கிடும் பிடியாகிட வேண்டும்
உன்னுடன் நான் துணையாய் சேர்ந்திட வேண்டும்
உன்னுடன் நான் இணையாய் வாழ்ந்திட வேண்டும்
உன் குடிநீரில் நான் தாகம் தணிந்திட வேண்டும்
உன் துடிப்பில் நான் தேக உயிராகிட வேண்டும்
உன் படியில் நான் முடிவுறா உயரங்கள் கண்டிட வேண்டும்
உன் கோடியில் நான் மீளா துயரங்கள் மறந்திட வேண்டும்
உன் வடிந்திடும் கண்ணீர் துளியாகிட வேண்டும்
உன் நெடிலில் சேர்ந்திடும் குறிலாகிட வேண்டும்
உன் செடியினில் நான் கருகிடா சிறுமலராகிட வேண்டும்
உன் பிடியில் நான் விலகிடா சிலையாகிட வேண்டும்
உன் மிடியில் நான் தணிந்திடா பசியாகிட வேண்டும்
உன் ஒடித்தலில் நான் தீர்ந்திடா விசும்பலாகிட வேண்டும்
உன் நடிப்பில் நான் நாடகமில்லா பாவமாகிட வேண்டும்
உன் வெடிப்பில் நான் வானமில்லா சிவப்பாகிட வேண்டும்
உன் பொடியில் நான் தொட்டுக்கொள்ளும் நாக்காகிட வேண்டும்
உன் நொடியில் நான் ஒட்டிக்கொள்ளும் நிமிடமுள்ளாகிட வேண்டும்
உன் விடியலில் நான் காய்ந்திடா பனித் துளியாகிட வேண்டும்
உன் கடியில் நான் புளித்திடா சிறு மாங்காயாகிட வேண்டும்
உன்னோடு நான் ஒரு வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்