தயக்கத்துடன் அவள் முன் ஒரு காதல்

தெரிந்தோ தெரியாமலோ பிறந்து விட்டேன் ......
நீ அறிந்தோ அறியாமலோ உன்னை விரும்பி விட்டேன் .......
உன் முன் முயன்றும் முயலாமல் வெளிப்படுத்த ஒரு தயக்கம் ......
தயக்கம் கொண்டு தான் அழைத்தேன் .....
உன் அலைபேசிக்கு பதிலாக என் இதயம் ஒலிக்கிறது சப்தத்தை ......
இருந்தும் துணிந்தவனாய் சொல்லிவிட்டேன் என் காதலை .......
காதலனாக வர வரம் கேட்டல் .....?
நண்பனாக வர வரம் தருகிறாயே காதலி ....!
சொல்ல வேண்டிய நாட்களில் எல்லாம் சொல்லாமல் விட்டு விட்டு .........
இப்பொழுது வருந்துகிறேன் சொல்லியதை எண்ணி .........
அதனால் தானடி அன்புக் காதலி ,,,,,,,,
அழகாய் திருத்திக் கொள்கிறேன் ,,,,
முகத்தில் முளைத்த தாடியை மட்டும் அல்ல ,,,,,,
மனதில் முளைத்த எண்ணங்களையும் ........