உனை நான் எப்படி மறவேன்

நாம் சந்திக்கும் அந்த மரத்தின்
நிழலில் அவ்வப்போது நான்
தனியாய் இளைப்பாறுவது உண்டு !
சருகுகளாய் உதிர்ந்து போன
இலைகளே நாம் பேசி உதிர்த்த
வார்த்தைகளை பத்திரமாய்
சேமித்து வைத்திருக்கிறது !
என் இதயம் இருத்தி
வைத்திருக்காதா !
உனை நான் எப்படி மறவேன் !