உனை நான் எப்படி மறவேன்

நாம் சந்திக்கும் அந்த மரத்தின்
நிழலில் அவ்வப்போது நான்
தனியாய் இளைப்பாறுவது உண்டு !

சருகுகளாய் உதிர்ந்து போன
இலைகளே நாம் பேசி உதிர்த்த
வார்த்தைகளை பத்திரமாய்
சேமித்து வைத்திருக்கிறது !

என் இதயம் இருத்தி
வைத்திருக்காதா !

உனை நான் எப்படி மறவேன் !

எழுதியவர் : ஜீனத் ரோஜா (4-Sep-17, 9:45 am)
பார்வை : 344

மேலே