யார் கடவுள்

அப்பா - என்றவுடன்
அலறிக்கொண்டு வருகிறது
அழுகையும்
ஆத்த்ரமும்.
பட்டால் தான்
புரியும் என்றால்
பரவாயில்லை.
போனால் தான்
தெரியும் என்றுணர்த்தும்
வஞ்சகன் - நீ
நிழல் கூட
நகர்ந்துவிடும்
நினைவுகள் மட்டும்
குத்துக்கல்லாய்.
நினைவுகளை
நகர்த்த கூட முடியாத
கோழை - நீ
அப்பாவை
அனுப்பியிருக்கிறேன்.
தரிசிக்க வேண்டியவன் - நீ.

- லக்ஷ்மி பாலா

பி.கு : இந்த படைப்பு கடவுளை புண்படுத்தினால் நான் பொறுப்பல்ல.

எழுதியவர் : (4-Sep-17, 10:13 pm)
சேர்த்தது : Bali
Tanglish : yaar kadavul
பார்வை : 984

மேலே