காற்றே பதில் சொல்

காற்றே பதில் சொல் !
கவிதை byகவிஞர் பூ.சுப்ரமணியன்


அங்கு
இங்கெனாதபடி
எங்கும் வீசும் காற்றே
குளிர் காற்றே
வாடைக் காற்றே
தென்றல் காற்றே !

நீ
புயலாக மாறும்போது
தொண்டர்கள் உழைப்பில்
அரசியல் தலைவர்கள்
அடுக்கு மாடிகளில்
ஆனந்தமாக தூங்கும்போது..

புயல் காற்றே
அப்பாவி ஏழை மக்கள்
வாழும் குடிசைகளை
வாரி எடுத்து
எறிந்து விடுகிறாயே
புரியும்படி பதில் சொல் !



பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (10-Sep-17, 12:50 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 180

மேலே