தனிமையின் முதுமை

நெஞ்சில் பாசத்தை வைத்து //
நெருப்பை தான் அள்ளி வைத்தது போல//
பிள்ளைக்காக அன்பை பாய்ச்சி //
தன் இளமையையும் இழந்து விட்டு//
தெரு வழியை நோக்கி நிற்கிறாள் அன்பு தாய்//

மரம் போல பிள்ளை வாழ்ந்திருக்க//

உறவு இன்றி தொடர்பின்றி// தாயோ தனிமையில் சாய்ந்து இருக்க//

அன்பால் வீசிய தழும்புகள் அழுத்தமாக படிந்து இருக்கும்//
அழியாமல் இருந்தால்//
அன்பு ஞாபகங்கள் பிறந்து//
மறக்க முடியாத நினைவு வருமென//
வரவுகளை எண்ணி காத்திருப்பாள்//

காயங்கள் வருத்தம் உண்டாக்க//
வார்த்தைகள் மௌனமாக
மாறி //
அன்பு சாரல்கள் இடை விடாது துடித்து//
நினைவுகளில் மூழ்க செய்ய//

இறுக்கமான கவலை வந்தாலும்/
முதுமையிலும் உயிர்ப்பு உண்டு //
துன்பங்கள் வந்தாலும்// துளிர் விடும் சக்தி இல்லாமல் போனாலும்//

//எந்த சுவையும் புரியாமல் போனாலும் //
எந்த நிறமும் தெரியாமல் போனாலும் //
பிள்ளையின் அன்பான ஆறுதல் வாசம் இல்லாவிடினும்//

மேகங்கள் போல//
வருத்தம் எல்லாம் கடந்து போகும் என// நம்பிக்கை
கொண்டு இருப்பாள்

எழுதியவர் : காலையடி அகிலன் (16-Sep-17, 9:26 am)
பார்வை : 73

மேலே