அழகு

பெண்ணே எது அழகு!!
நெற்றி தொடும் உன் ஒற்றை முடியா?
மேகம் தவழும் கற்றை குழலா?
மெல்ல ஈர்க்கும் காந்த பார்வையா?
பசியை தூண்டும் தேன் இதழ்களா?

உன்னை ரசித்தே என் நேரங்கள் நகர்ந்திட..
நான் உண்ணுவதும்!! உறங்குவதும்!! எப்போது??
உன்பின்னே என் கால்கள் நடந்திட..
நான் என் வீடு வாசல் செல்வது எப்போது??

உனக்கான எனது அன்பே!! என் கவிதைகள்..
எனக்கான உனது காதலோ!! நம் பிள்ளைகள்..

எழுதியவர் : வேலு சதீஷ்.. (19-Sep-17, 12:46 pm)
Tanglish : alagu
பார்வை : 250

மேலே