நீளும் இரவுகளை

சோப்புடன் சேரும்
நீரெல்லாம் நுரையாக
மாறிப் போவதுபோல
விழிமூடி துயின்றதும்
என் அனுமதியற்று
உன் நினைவுகளோடு
சேர்ந்துவிடும் எந்தன்
கனவுகள் எல்லாம்
சிறகுகள் கொண்டு
பறக்க தொடங்குகின்றன

கனவுகலாய் உருக்கொண்ட
என் இதயத்தின்
வேட்கை எல்லாம்
நீலவானில் போய்
சிறுசிறு நட்சத்திரங்களாய்
ஒட்டிக்கொள்கின்றன...

எல்லாவற்றையும் துறந்து
உன்னையும் மறந்து
உறங்கி கொண்டிருக்கும்
என்னைப் பார்த்து
கண்சிமிட்டித் தான்
அவை சிரிக்கின்றன ...

அந்த நட்சத்திரங்களின்
குலுக் சிரிப்பில்
விழித்துக் கொள்கிறேன்...

நீளும் இரவுகளை
தூங்கா நீல்இரவுகளை
பின்னது பரிசாக
எனக்கு தந்து
ஏனோ செல்கின்றன ...

எழுதியவர் : யாழினி வளன் (25-Sep-17, 10:20 am)
Tanglish : neelum eravugalai
பார்வை : 78

மேலே