உன் அடம்பிடித்தலில்

உன் அடம்பிடித்தலில்
உன் பிடிவாதத்திடம்
நான் விரும்பாமல்
தோற்று போனாலும்
சுகமாகவே இருக்கிறது
வென்ற களிப்பில்
வெண்ணிலாநீ உதிர்க்கும்
ஒற்றை சிரிப்பில்
சற்று கரைந்துதான்
போகிறேன் நான் ....


........
..........

என் மடிப்பிறந்த
என்னுயிர் மழலையின்
அடம்பிடித்ததலில்
மயங்கிப் போகாமல்
மல்லுக்கட்டி நிற்பது
முதலில் வழக்கமே..

அடம்பிடிக்கும் அழகில்
மயங்கியே பின்
மனம் தொலைத்தலும்
ஒரு சுகமே..

பின்னதன் கள்ளமற்ற
பிஞ்சு சிரிப்பில்
கரைந்து போவதும்
ஒரு சுகமே ....

எழுதியவர் : யாழினி valan (25-Sep-17, 10:33 am)
பார்வை : 83

மேலே