காதல் கிறுக்கி

அன்றொரு நாள் அந்தி மாலையில்
என் விழிகளில் விழுந்த கள்வனே...
உன்னை கண்ட அந்த நிமிடத்தில் என் இதயத்தில் ஏதோ ஏதோ....
ஒர் இனம் புரியா உணர்வை நான் உணர்ந்தேனடா...
நீ தான் நீ தான் எந்தன் உயிரின் பாதி என்றறிந்தேனடா...
இன்று காதல் கிறுக்கி ஆனேனடா...
உன்னாலே காதல் கிறுக்கி ஆனேனடா...

தாய் சொன்ன சொல்லை மறந்தேன்
தந்தை கொடுக்கும் அன்பை மறந்தேன்...
இரவில் தூங்கும் தூக்கத்தை மறந்தேன்
பகலில் பலரிடம் பேசவும் மறந்தேன்...
இது ஏனோ இது ஏனோ உள் மனதும் கேட்கிறதே...
நீ தானே எந்தன் உயிரின் பாதி என்கிறதே...
இது தான் மெய் காதல் என்று நான் உணர்ந்தேனடா...
உன்னாலே காதல் கிறுக்கி ஆனேனடா...
இன்று உன்னாலே காதல் கிறுக்கி ஆனேனடா...

உன்னாலே இன்று புதிதாக..............

கடல் அலைகளின் ஓசையை ரசித்தேன்
மழை துளிகளின் தூறலை ரசித்தேன்...
பூ பூக்கும் ஓசையை அறிந்தேன்
இயற்கை தரும் சுவாசத்தை உணர்ந்தேன்....
இது தானே உன்னாலே காதல் என அறிந்தேன்னே...
இன்று பூமியில் புதிதாய் பூத்தது போல் நான் உணர்ந்தேன்னே .....
இது தான் உயிர் காதல் என்று நான் அறிந்தேனடா.....
உன்னாலே காதல் கிறுக்கி ஆனேனடா...
இன்று உன்னாலே காதல் கிறுக்கி ஆனேனடா...

எழுதியவர் : ஷர்மிளா தேவி G (25-Sep-17, 10:43 am)
Tanglish : kaadhal kirukki
பார்வை : 415

மேலே