மௌனம்

வார்த்தைகளை மொழியாமல்
உள்ளுணர்வைப் போர்த்த நிலையன்று
மௌனம் !
உள்ளத்து உபாதை யாவும் ஒழிந்த நிலையே
மௌனம்.
உவகையும் உலர்ந்த நிலையே
மௌனம்.
அன்றலர்ந்த மலராய் என்றும் மலர்ந்து
உலர்ந்திடா நிலையே
ஒப்பற்ற மௌனம்.
மனதத்தக்கது ஏதுமற்ற ஓதா நிலையே
மௌனம்.

பாலு குருசுவாமி.

எழுதியவர் : பாலு குருசுவாமி. (2-Oct-17, 8:51 pm)
Tanglish : mounam
பார்வை : 65

மேலே