Baluguruswamy - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Baluguruswamy |
இடம் | : KeelaRajaKulaRaman. |
பிறந்த தேதி | : 05-May-1955 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Nov-2010 |
பார்த்தவர்கள் | : 326 |
புள்ளி | : 89 |
As and when thoughts bloom into an elegant form, it is worth sharing with the
world. My Poems are such blossoms.
வார்த்தைகளை மொழியாமல்
உள்ளுணர்வைப் போர்த்த நிலையன்று
மௌனம் !
உள்ளத்து உபாதை யாவும் ஒழிந்த நிலையே
மௌனம்.
உவகையும் உலர்ந்த நிலையே
மௌனம்.
அன்றலர்ந்த மலராய் என்றும் மலர்ந்து
உலர்ந்திடா நிலையே
ஒப்பற்ற மௌனம்.
மனதத்தக்கது ஏதுமற்ற ஓதா நிலையே
மௌனம்.
பாலு குருசுவாமி.
"கருணை" என்றும் ஏமாறுவதில்லை !!!
ஏனென்றால்
அது என்றும் கைமாறு கருதுவதில்லை !
அது
அருணனை ப் போல்
என்றென்றும் எங்கெங்கும் ஒளிர்வது.
பாலு குருசுவாமி
பாக்கியம்!"
உண்மையே...
உன்னைப் பார்த்தும்,
ஒருசிலர்,
"நம்ப மாட்டேன்"
என்கிறார்களே !
ஒரு கணம்
மௌனமாயிருந்த
உண்மை சொன்னது !
"அது அவனவன் பாக்கியம்!"
பாலு குருசுவாமி .
புது வருட வாழ்த்துக்கள்
வருடம் 2013 இன்
முன்னூற்று அறுபத்து ஐந்து நாட்களும்
முழுமையாகச் சென்றுவிட்டன!
இப்படியாக வாழ்நாளின் வருடங்களும்
முழுமையாகச் சென்று சேர்ந்தன!!
ஆகவே
முழுமையைக் கோட்டை விட்டவர்களாய்....
ஆட்டம் பாட்டத்தில்
ஆர்ப்பரித்துத் திரிகின்றோம்!!!
ஆகவே நண்ப,
செழுமையை நோக்கி போக்கும் நேரத்தில்,
முழுமையைக் காணவும் முனைந்திரு!
முழுமையில்,
உன்னையும் உலகையும் ஒன்றாகப் பார்!!
உன்மத்தம்! உன்மத்தம்!! உன்மத்தம்!!!
பாலு குருசுவாமி.