சென்ரியு

ஹைக்கூ கவிதைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.அது என்ன சென்ரியு கவிதைகள்?இது ஒரு நவீன ஹைக்கூ.ஹைக்கூவில் மானுடம் பற்றி ஏதேனும் குறிப்பிருந்தால் அதை சென்ரியு என்று சொல்கிறார்கள்.இதன் இலக்கணம் என்ன தெரியுமா?ஆழமற்றது;வேடிக்கையானது.விடுகதை போன்றது.நகைச்சுவையானது;பொன்மொழி போன்றது.இவ்வகைக் கவிதைகளைத் திரட்டியவர் பெயர் காறை சென்ரியு.அவர் பெயரிலேயே இக்கவிதைகள் வெளி வருகின்றன.தமிழில் சென்ரியு வகைக் கவிதைகளை ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதி ''ஒரு வண்டி சென்ரியு''என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.அதிலிருந்து நான் ரசித்த சில கவிதைகள்:

''தொகுதிதான்
முடிவாகவில்லை.
தோல்வி முடிவாகிவிட்டது.''
******
''பணம்
எதையும் செய்யும்.தெரிந்தவர்கள்
பணம் செய்தார்கள்.''
******
''ஆயிரம் பேரோடு
வேட்பு மனுத்தாக்கல்.
ஐம்பது வாக்குகள்.''
******
''சட்டம் ஒழுங்கைக்
காப்பாற்ற முடியவில்லை
சட்டசபையில்.''
******
''குடித்தவன்
குடலுக்குள்ளும்
மயங்கவில்லை மது.''
******
''கிளித்தோப்பில்
கட்சிக்கூட்டம்.
பேசுவதை நிறுத்தி விட்டன கிளிகள்.''
******
''சண்டைக்கோழி
வென்றாலும் தோற்றாலும்
பிரியாணி.''
******
''பூசாரி கையில் கட்சி.
வெளியேற்றப்பட்டார்
கடவுள்.''
******
''விடைகள் கேட்ட வினா
மாணவனே
தேர்ந்து விடுவாயா?''
******
''ஒலிபெருக்கி
சோதனை முடிந்ததும்
பேச்சாளர் சோதனை.''
******
''அதிகாரி பிறந்தநாள்.
வீடு முழுக்க
லஞ்ச அலங்காரம்.''
******

எழுதியவர் : (5-Oct-17, 4:28 pm)
பார்வை : 603

மேலே