ஐக்கூ முயற்சி
ஓய்ந்தது மழை
நிரம்பி வழிகிறது
இலைகளின் கண்கள்....!
(நி)நனைந்ததும்
பசுமையாகி விட்டது
முதல் காதல்...!
பொழிந்ததும்
கரைந்து விட்டது
அழுக்குகள்...!
பிணையில் வந்த மழை
மகிழ்ச்சியில் சாலையோர மரங்கள்
காத்திருக்கும் ஊர்திகள்....!
எந்நேரமும் காற்றிருந்தாலும்
எப்பொழுதும் சுவாசிப்பதில்லை
புல்லாங்குழல்கள்....!
அற்புத கலைஞன்
அழுக்கான குணத்துடன்
குயில்....!