காந்திக்கு ஒரு கடிதம்

அரசும் மறந்ததே !
ஆண்டுக்கு ஒருமுறை என்பதால் ;
அன்று மட்டும் விடுமுறை !
மது கடைகளுக்கு !

அகிம்சையை கையில் எடுத்தாய் !
அன்னியனும் மிரண்டு போனான் !
அன்பால் மட்டுமே ;
அகிலத்தை வென்றாய் !

ஆட்சி அதிகாரத்தை வாங்கிதந்தாய் !
அடிமை தனத்தை போக்கிச்சென்றாய் !
ஆள்பவனோ அடாவடிப்பேர்வழி !
அன்பு என்பதும் அண்ணாந்து பார்க்கும் தூரம் !

காதர் துணியில் ;
கவுரவத்தை காட்டினாய் !
தலைநிமிர ஒருமுறையேனும் -
தாய் மண்ணில் பிறப்பாயோ மறுபடியும் !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (18-Oct-17, 10:12 am)
பார்வை : 78

மேலே