தீபத்திருவிழா

தீபாவளி தீபவரிசை தரிசனம்
தரணி தன்னில் இந்தியா காட்டும்
இருளகற்ற பகலவன் இருந்தாலும்
ஒளிகூட்டும் தீபம் வேண்டும்

பகழி போல் கதிர்கள் பாய்ந்து
எங்கும் ஒளி நிரம்பட்டும்
மனயிருள் நீங்கி அருளொளி பரவட்டும்
ஒளிவெள்ளம் இருள் நீக்கம்

கொண்டாடுங்கள் பண்டிகையை கொண்டாடுங்கள்
கொண்டாடுமிடத்தில் தெய்வம் நிற்கும்
போற்றுங்கள் மனித சமுதாயத்தை
வாழ்த்துங்கள் யாவரையும் வாழ்வீர்கள் நீங்களும்

எழுதியவர் : ரமணி (18-Oct-17, 12:57 pm)
பார்வை : 69

மேலே