செந்தில் வேலவா

செந்தூர்க் கடலின் சிற்றலை கூடக்
கந்தன் புகழைக் கனிவுடன் பாடும் !
சேவற் கொடியும் சீர்மிகு வேலும்
காவ லிருக்கும்; கடும்பகை வெல்லும் !
பாடி யழைத்தால் பரிவுடன்
தேடி வருவான் செந்தில் நாதனே ...!!!

( நேரிசை ஆசிரியப்பா )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (21-Oct-17, 6:05 pm)
பார்வை : 75

மேலே