கருப்பாய் நான் பிறந்ததால்
பெண்ணை நிலவென்றும்
மலரெனவென்றும்
வர்ணித்த கவிதைகள்...
பெண்ணாக கொள்ளவில்லையோ.....
கருப்பாய் நான் பிறந்ததால்...
நிறம் தான்
நம் நிலையை சொல்லுமோ...
சில புகைப்படங்களும்
மேடைகளும் கூட
எனை பின்னுக்கு
தள்ளியதே...
கருப்பாய் நான் பிறந்ததால்...
கண்ணடிப் படாமலிருக்க
கன்னத்தில் வைக்கப்படும்...
கரும்மையாய்.....
நண்பர்கள்
மத்தியில் நிற்கிறேன்.....
இறைவா.....
பிறப்பு உன் கையில்
இருந்திருக்க...
எனை மட்டுமேனோ
வஞ்சித்துவிட்டயே....