நானென்ன செய்தேனோ

உன் நாணம் -அதில்
நானிருக்க
நானென்ன செய்தேனோ!

பூவலர் முகிழ்
மலரத்தனையும் நீயாய்..
உனையே
தாங்கி ரசிக்கும்
காதல் ஆதாரமாய்
நானிருக்க
நானென்ன செய்தேனோ!

தேகத் தீண்டல்களில்
உயிர் திரவியம் வீசிட
முழுதாய் நுகர்ந்தே
காதல்
உயிர்வாழ்கிறது

காதலுயிருதணம்
உன்னைச்சேர
நானென்ன செய்தேனோ!

எழுதியவர் : மகேந்திரன் (30-Oct-17, 10:02 pm)
பார்வை : 284

மேலே