திருமணம் மறுமணம்

திருமணம்
~~~~~~~~
தன் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தானும் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று; அதற்காக தன் பிள்ளைகளுக்கு ஊர் கூட்டி, உறவினர்களை அழைத்து, நல்ல நாள் பார்த்து பெற்றோர்கள் நடத்தி வைக்கும் ஒரு நிகழ்வு திருமணம் ஆகும்.

ஒரு ஆணும், பெண்ணும் ஒருவருடன் ஒருவர் ஒன்று சேர்ந்து வாழ்க்கை என்னும் வசந்த்திற்க்கு செல்லும் வரை மூச்சு விட நேரமின்றி திருமணம் செய்து முடிக்கும் முயற்சியில் பெற்றோர்கள் ஈடுபடுகின்றனர். அப்படி செய்யும் திருமணங்கள் பல இன்று திரும்பி பார்க்கும் அளவில் இல்லாமல் போய்விட்டது. இந்த சமூதாயத்தில்.


விவாகரத்து
~~~~~~~~~
கணவன் என்றும், மனைவி ஒரு அங்கிகாரம் கொடுத்து எதிர்காலத்தை நோக்க இல்லற வாசலில் ஈடுபட இந்த உறவு மற்றும் சமுதாய அமைப்பு அணுப்புகின்றது. அதில் சில தம்பதிகள் மனப்பரிமாற்றம் என்ற ஒன்றை இழந்து; இன்பம் இழந்து வாழ்க்கையை நடத்துகின்றனர். இதன் காரணமாக அடிப்படையிலேயே அவர்கள் முரண்பட்டு வாழத் தொடங்குகின்றனர்.

முதலிலேயே முரண்பட்டு வாழும் அவர்கள் அதிகம் கவலைகளில் மூழ்கி கிடக்கின்றனர். வேற்றுமை என்ற ஒன்று அவர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி வாழ்க்கையை வெறுத்துவிடுகின்றனர். அதன் காரணமாக வீட்டு வாசலில் குடியேர மறந்து விவாகரத்திற்காக நீதி மன்றத்தின் வாசல்களை நாடுகின்றனர். நாள் பார்த்து, நேரம் பார்த்து, சொந்த பந்தங்கள் கூட்டி நடத்திய திருமணங்களை எல்லாம் சொல்லிக்கொள்ளாமல் பிரித்துவிடுகின்றது நீதி மன்றத்தின் தீர்ப்பு.

நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் எல்லாம்
நீதிமன்றத்தினை தேடினால்
அச்சடிக்கப்பட்ட பத்திரிக்கைகள்
யாரிடம் அழுது புலம்பும்...!

மனித மனசுகள் ஒன்று சேராமல் நீதிமன்றத்தினை தேடி சென்றால் நீதி வழங்குவதை விட அதனால் வேறு என்ன செய்ய முடியும்?!.

விவாகரத்து செய்தவர்களின் மீது
~~~~~~~~~~~~~~~~~~~~~~
சமுதாயத்தின் பார்வை :
~~~~~~~~~~~~~~~~~~~~
"சமுதாயம்" இதனை என்ன செல்லி வாயடைக்க முடியும்?!. வார்த்தைகள் எல்லாம் அதனிடம் உள்ள போது நாம் எப்படி வாக்கியம் அமைக்க முடியும்?.


ஆணுக்கும், பெண்ணுக்கும் சம உரிமை கொடுக்கும் சமுதாயம். அவர்கள் விவாகரத்து என்ற ஒன்றை பெற்ற பின்பு சாகடிக்கத் தொடங்குகின்றது. வாழ்வில் வழுக்கி விழுந்தவர்கள் அழுதுதவிக்கும் போது அவர்களுக்கு "ஆறுதல் சொல்ல வேண்டிய இச்சமூகம்" அவர்களை அறவே அழிக்க நினைக்கின்றது.

நாம் வாழ நாமே அமைத்த சமுதாயம் நம்மை அழிக்கும் நிலையில் மாறியுள்ளது. இதன் மத்தியில் யாரால் என்ன செய்ய முடியும்?. சமூகம் துற்றி பேசும் போது நாம் துன்பம் படுவதைவிட தூற்றங்களை கேட்காத செவிடுகளாக மாறிவிடுவது நல்ல முயற்சியாகும்.


திருமணம் (மறுமணம்)
~~~~~~~~~~~~~~~~
விவாகரத்து செய்த ஒரு ஆணோ, அல்லது பெண்ணோ விதியென்று நினைத்து விணாக கண்ணீரில் உங்கள் குழந்தைகளை தவிக்க விட வேண்டாம். கண்ணீர் என்ற ஒன்றும் யாருக்கும் நிரந்தரம் இல்லை. உலகத்தை தவறாக பார்பவர்களின் மத்தியில் " மனித நேயம் "கொண்ட சிலர் அதனை சரியாக பார்க்கின்றனர். அவர்களில் சிலர் சிலரின் வாழ்க்கைக்கு வடிவத்தினைக் கொடுக்கின்றனர்.

விவாகரத்து ஆனபின்பும் அவர்களிடம் விதி முடியவில்வை. எத்தனையே இழந்த பின்னும் எதிர்காலம் உள்ளது. மனித நேயம் கொண்ட சிலர் முழு மனதுடன் உங்களை ஏற்றுக்கொள்ள நினைக்கின்றனர். அப்படி மனித நேயம் கொண்டவர்களை நீங்கள் எற்றுக்கொண்டால், உங்கள் இருமனமும் ஒருமனதாக மாறினால் உங்களுக்கும் இன்றைய உலகில் உள்ளது ஒரு "திருமணம்(மறுமணம்)".

இன்று விஞ்ஞான உலகில் ஆயிரம் கண்டுபிடிப்புகள் உள்ளன. அவைகள் மருத்துவத்தையும் சார்ந்துள்ளன. " மறுதிருமணத்திற்கு" செல்லும் தம்பதிகள் எதிர்காலத்தில் எவ்வித சந்தேகம் இன்றி வாழ்க்கை தொடங்க மருத்துவத்தினை சார்ந்து இருக்கலாம்.

இதனை சோதனை என்று தங்கள் வாழ்க்கையை எண்ணாமல் மருத்துவ சோதனை செய்து ஆரோக்கியமான வாழ்வில் ஆயுள்வரை அன்பாக இணைந்து இருக்காலாம்.



( எதையும் சோதனை என்று நினைக்காமல் நீங்களும் வாழ்வில் சாதித்துக்காட்டுங்கள்)

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (2-Nov-17, 12:31 pm)
பார்வை : 228

சிறந்த கட்டுரைகள்

மேலே