மாலை தென்றல்

இரவுப் பொழுதில்,
இறகுகள் மறித்து,
இயற்கையெனும் விசிறி வீசும்,
ஈரக் காற்றிது….

கனவுகள் காணும் இரவின் முன்னே,
கவிதையாய் வரும் நினைவுச் சாரல்….
கசந்து நிற்கும் நினைவுகளெல்லாம்,
தென்றல் உந்தன் சுவாசம் பட்டு,
இன்சுவை நினைவாய் மாறாதோ….

அவளைப் பற்றி சிந்திக்கும் இவ்வேலையில்,
தென்றலின் நினைவிருக்காது எம் சித்தத்தில்….
அடர் குளிர் காற்று தந்து,
அவள் நினைவை உண்டாகுதே….

நிலாமகள் தூது இதுவோ,
நித்திரை முழுதும் தவழ்ந்திடுதே….
பூமி உலா வந்த பிறகும்,
ஓய்வதில்லை உந்தன் பணிகள் முற்றிலும்….!!!!

எழுதியவர் : (10-Nov-17, 11:54 am)
Tanglish : maalai thendral
பார்வை : 4910

மேலே