என் தாய்க்கு ஓர் கவிதை

என் தாய்க்கு ஓர் கவிதை...

எழுதினேன்,
ஓர் கவிதை.....
என் தாயவளுக்கு!!!

முதல்முறை படித்தால்...
என் பாசம் உணர்ந்தாள்.

மறுமுறையும் படித்தால்....
அழகாய் புன்னகைத்தாள்.

மீண்டும் படித்தாள்....
பலமுறை,
படித்துக்கொண்டே இருந்தாள்...
கண்ணீருடன் பார்த்தாள்...
அவளது தாயின் படத்தை!!!!!

எழுதியவர் : பானுமதி (19-Nov-17, 2:40 pm)
சேர்த்தது : மதி
பார்வை : 848

மேலே