அப்பா

அப்பா
ஒவ்வொரு நொடியும் என்னை செதுக்க போராடினாய்
இன்று நீ செதுக்கிய முழு உருவம் கொண்டு நிற்கின்றேன்.
நான் நானில்லை
உனது பிம்பம்
உனது உதிரம்
உன் நிழலாக துடிக்கும் உன் உயிர்
நான் பூமியில் மலர்ந்த பொழுது எனக்காக ஓர் இதயம் உள்ளதென்று என்னை ஏந்தினாய்
இன்றும் என்னை ஏந்துகின்றாய்
ஏழ்மை வாட்டும் பொழுதும் என்னை இளவரசி யாய் வளர்த்தாய்
நான் பெரியவள் ஆனதும் சிறு பிள்ளையாய் பாவிப்பதும் நீ தான்
தந்தையே எனக்காகவே வாழ்ந்தாய்
வாழ்கின்றாய்
சிறந்த தோழனாய்
சிறந்த ஆசானாய்
இருப்பவரே
உனது வழிகாட்டி யாரென்றால் நீ என்று தயக்கமின்றி கூறுவேன்...
எனது தந்தையே
என்றும் உனது கை பிடித்து நடப்பேன் தந்தையே....
எந்த இன்னல்கள் நேர்ந்தாலும்...
வாழ் நாள் முழுதும்

எழுதியவர் : பிரகதி (23-Nov-17, 2:02 pm)
சேர்த்தது : அரும்பிசை
Tanglish : appa
பார்வை : 393

மேலே