இளையராஜா

இசைகளின் ராஜா நீ
எங்கள் இளையராஜா நீ
இன்னிசைகளை அள்ளித்தர
இறைவன் எங்களுக்கு
தந்த வரம் நீ
நாதத்தின் சுரம் நீ ,
கல்லான நெஞ்சைக்
கூட உன் இசையால்
கண்ணீர் சிந்த வைத்தவனல்லவா நீ ...
காதல் வலியில்
கூட சுகத்தை
அள்ளித்தந்தவனல்லவா நீ ...
தாய்முகம் காணா
பிள்ளையையும் உன் தாலாட்டால்
உறங்கவைத்தவனல்லவா நீ ...
தோல்வியையும் உதறி விட்டு
நம்பிக்கை துடிப்போடு
எழுந்து ஓடவைத்தவனல்லவா நீ ..
உன் இசை கேட்டல்
துவண்டவனும் வாழ
வேண்டுமென யோசிப்பான்
வாழ்வின் வலியில்
துடிப்பவனும்
மரணத்தை நேசிப்பான் ...
யோகியும் ஞானியும் கூட
காதலில் வீழ்வர்
உன் இசையில் வீழ்ந்துவிட்டால் ...!!
நீ மட்டும் இல்லாமல்
இருந்திருந்தால் ....
பாமரனுக்கு
இசையின் சுவை
தெரியாமல் போயிருக்கும் ..
பச்சைத் தமிழனின்
பெருமை இவ்வுலகு
அறியாமல் போயிருக்கும் ..
நீவாழும் சமகாலத்தில்
நாங்களும் வாழ்கிறோம்
என்பதன்றோ நாங்கள் செய்த
பெரும் பாக்கியம் ...
நீ போட்ட மெட்டு
செவிகளை தொட்டு
இதயம் வருடிவிட்டு
எங்களுள் கலப்பது
எங்களது புண்ணியம் ...
இசையால் எங்களை
எங்கள் மனதை வருடும்
இசைஞானி
இசைகளின் இறைவன் நீ
இசை உள்ளவரை
நீ வேண்டும் .....
என்றும் ....என்றென்றும் ...
ஜீவன்