குறுக்கு சிறுத்தவளே ஒரு முயற்சி

கஞ்சாடை பார்வையிலே
என்மனசயும் கெடுத்தவளே
நித்தம் நித்தம் உன்ன என்னி
உன் நெனப்பில்
வாழுரேண்டி
உன் மடியினில் கிடந்திடும்
நாளுக்காக ஏங்குரேண்டி

கஞ்சாடை பார்வையிலே
என்மனசயும் கெடுத்தவளே
நித்தம் நித்தம் உன்ன என்னி
உன் நெனப்பில்
வாழுரேண்டி
உன் மடியினில் கிடந்திடும்
நாளுக்காக ஏங்குரேண்டி


விழியிரண்டும் உன்ன மட்டும் நெனைக்கவே செய்யுதய்யா
என்னால உறங்கவும் முடியல
பொழம்பவும் முடியல
வாடுறேன்

இது எப்போது மாறிடுமோ
என் தாகந்தான் தீர்ந்திடுமோ
இனி நீயின்றியே
இங்கு நானில்லையா
அட கொஞ்சம் வந்து
என்ன நீயும் அள்ளிப்போயா

கஞ்சாடை பார்வையிலே
என்மனசயும் கெடுத்தவளே
நித்தம் நித்தம் உன்ன என்னி
உன் நெனப்பில்
வாழுரேண்டி
உன் மடியினில் கிடந்திடும்
நாளுக்காக ஏங்குரேண்டி

என்மனதை திருடிச் சென்றவனே
உன்நினைவில் உருக வைக்கிறியே

இதயத்தில் நொழஞ்ச கண்மனியே
என் உயிரை திருப்பி தா சகியே

செல்ல செல்ல வார்த்த சொல்லி
என் மனச திருடிபுட்ட
உன் பார்வ வசியத்தில் மயங்கின நெஞ்சம் இன்னும் உன்ன தேடி
ஏங்குது

அடி உதட்டோர கருத்த மச்சம்
என்னை ஏதேதோ செய்யுதடி
என்விழி மூடினால்
உன்மேனிதான்
அடி என்ன செஞ்ச
என்ன நீயும் மீட்டுத்தாடி

கஞ்சாடை பார்வையிலே
என்மனசயும் கெடுத்தவளே
நித்தம் நித்தம் உன்ன என்னி
உன் நெனப்பில்
வாழுரேண்டி
உன் மடியினில் கிடந்திடும்
நாளுக்காக ஏங்குரேண்டி

என்னுயிரை உனக்குள் மெய்யாக்கி உன்னுடனே
வடித்திடு என்கவியே

உன்கவியில் உன்னை உருவாக்க
நெஞ்சம் தின துடிக்குது மன்னவனே

உன்ன என்னி நித்தம் நித்தம்
கவிதை பல பாடுறேன்டி
என்னுயிர் உன்னுடன் கலந்தே
உணர்வுகள் பகிர்ந்திட ஏங்குது

அட என்தேகம் சிலுக்குதய்யா
அது உனைத்தேடி தவிக்குதய்யா
நா உனக்காகத்தான்
இங்கு உயிர் வாழுறேன்
அட நீயுமின்றி
நானும் இங்கே
தவிக்கிறேன்யா

கஞ்சாடை பார்வையிலே
என்மனசயும் கெடுத்தவளே
நித்தம் நித்தம் உன்ன என்னி
உன் நெனப்பில்
வாழுரேண்டி
உன் மடியினில் கிடந்திடும்
நாளுக்காக ஏங்குரேண்டி

விழியிரண்டும் உன்ன மட்டும் நெனைக்கவே செய்யுதய்யா
என்னால உறங்கவும் முடியல
பொழம்பவும் முடியல
வாடுறேன்

இது எப்போது மாறிடுமோ
என் தாகந்தான் தீர்ந்திடுமோ
இனி நீயின்றியே
இங்கு நானில்லையா
அட கொஞ்சம் வந்து
என்ன நீயும் அள்ளிப்போயா

எழுதியவர் : சே.இனியன் (28-Nov-17, 12:14 pm)
பார்வை : 154

மேலே