காதலின் ஓசை

காதலின் ஓசையைக்
காதினில் கேட்பதும்
ஓர் சுகம்-அந்த
சுகத்தினில் சிரிக்கிறேன்!
காதலின் நிறத்தினைக்
கண்களால் காண்பதும்
அதிசயம்-அந்த
அதிசயம் பெறுகிறேன்!
கைப்பிடித்துக் காதலித்து
திருமணம் செய்வது பெரிது!
வாழ்க்கைப் போகும் தூரம் வரையில்
காதலை தொடர்வது அறிது!
எந்நெஞ்சின் பூவே-என்
கண்ணில் மெல்ல
நீ வந்து போனாய்
யாரின் கண்ணும்
படாத வண்ணம்
உயிரும் திறக்கும்
உள்ளே செல்ல!
உலகத்தில்
புகழ்பெற்ற பூக்கள்
உன் கூந்தல் பூதான்
"காட்வின் ஆஸ்டின்" சிகரம்
மேலே நின்று சொல்லட்டான்!
உனக்குள்ளே
அழகான சிரிப்பை
என்மேலேக் கொட்டு
என்றேதான்...
எங்கெங்கும்...
சொல்லிச் செல்லட்டான்!
அழகே
உன் அழகினை வரைய
உலகினில் சிறந்த
வண்ணத்தை எடுத்து
நான் வரைந்தேனே!
அதையே
உன் அழகிற்கு ஈடு
இல்லையென்று
வரைந்ததை எடுத்து
என்னுல் கரைத்தேனே!
எந்தன் விழியில் விழுந்திடும்
பூவே...
எந்தன் இதயத்தில் மிதந்திடும்
தீவே...
எந்தன் கண்ணில் பெருகிடும்
நீரே...
நீ சொன்னால் போதும்
என்னைத் தருவேன்!
நீ காதல் சொல்லும்
வார்த்தையொன்றை
காத்திட்டு நானிருப்பேனே!
நீ காதல் சொன்னால்
உன்னை என்னுல்
தைத்திட்டுக் காத்திடுவேனே!

எழுதியவர் : sahulhameed (30-Nov-17, 1:58 pm)
சேர்த்தது : HSHameed
Tanglish : kathalin oosai
பார்வை : 899

மேலே