பற்றி எரிந்தேன்

சிலமணிநேரம் கண்டதும்
மனதில் ஏதேதோ எண்ணங்கள்
நான்கொடுக்கும் முத்தத்தால்
சிவக்கவேண்டும் உன் கண்ணங்கள் !...

தேகத்தை உரசவேண்டி
மனம் ஒற்றைக்காலில் நிற்கிறது
உன்மேல்கொண்ட ஆசைகள்
என்னை உன்னிடமே விற்கிறது

கட்டியணைக்க எந்தன்
கரங்கள் தானாகத் துடிக்கிறது
தேகத்தைக் காண்பதற்கு
விழிகளோ ஆசையில் பறக்கிறது !...

மோகத்தைத் தூண்டுவது
உந்தன் பிடிப்பான ஆடைஅணிவிப்பு
மீண்டும்மீண்டும் பார்க்கத்
தூண்டுவது உன் அறியாமைநடிப்பு !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (1-Dec-17, 9:37 am)
பார்வை : 138

மேலே