தனிமை

தனிமை! தனிமை!
மனிதனை மனிதனாக்கும்
கருவறை!
விடைகளைத் தேடும்
வினாச் சாலை!
ஒவ்வொருவருக்கும் ஓர்
அறிவுக்கோவில்!
காதலர்களுக்குக்
கனிவான கனவுதரும்
நித்திரை!
போராடும் வீரனுக்குப்
பயிற்சி தரும் களம்!
கவிஞர்களுக்குக் கவியூட்டும்
கற்பனைக் கூடம்!
கண்டுபிடிப்புகளின் மூலம்!
வெறுமைதான் தனிமை, ஆனாலும்,
வெறுமையை
வண்ணங்களால் அலங்கரிக்கக்
கற்றுத்தரும் பலபாடங்களை
தனிமை!