வல்லினத்தின் குறுநாவல் பதிப்புத்திட்டம் நாள் நீட்டிப்பு

மலேசிய நவீன இலக்கிய வளர்ச்சிக்குத் தனது பங்களிப்பைத் தொடர்ந்து ஆற்றிவரும் வல்லினம் இவ்வருடம் குறுநாவல் பதிப்புத்திட்டத்தில் காலக்கேடு 28 பிப்ரவரி 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


இத்திட்டத்தின் மூலம்:

•பதிப்பிக்கப்பட்ட குறுநாவல்கள் உலகம் முழுதும் உள்ள தமிழ் வாசகர்கள் மத்தியில் சென்று சேரும்.
•நூலாக்கப்பட்ட குறுநாவல்களை ஒட்டிய தொடர் கலந்துரையாடல்கள் நாடு முழுவதும் நடைப்பெறும்.
•பத்து நாவல்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே ஒரு நாவல் ஆங்கில மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்படும்.
போட்டியின் விதிமுறைகள்:

•தலைப்பு பொதுவானது.
•வயது வரம்பில்லை.
•குறுநாவலுக்கான களம் நிச்சயம் மலேசிய/ சிங்கை நிலம் சார்ந்ததாக இருத்தல் அவசியம்.
•குறுநாவல் சொந்தப்படைப்பாக இருத்தல் வேண்டும். ஏற்கெனவே அச்சில் வெளிவந்ததாகவோ இணையத்தில் உள்ளதாகவோ தழுவலாகவோ, மொழிபெயர்ப்பாகவோ இருத்தல்கூடாது.
•கணினியில் தட்டச்சு செய்யப்பட்டோ அல்லது கையெழுத்துப்பிரதியாகவோ அனுப்பலாம்.
•குறுநாவல் 150 பக்கத்திற்கு மேற்போகாமலும் 100 பக்கத்துக்குக் குறையாமலும் இருப்பது அவசியம். (கணினி எழுத்துரு அளவு : vijaya- 11point , Latha-8point)
•ஓர் எழுத்தாளர் எத்தனை படைப்புகளையும் அனுப்பலாம். ஆனால் ஒரு படைப்பாளி ஒரு பரிசுக்கு மட்டுமே தகுதியானவராவார்.
•படைப்பைத் தபால் அல்லது மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம்.
•தேர்ந்தெடுக்கப்படும் நாவலை செறிவாக்கவும் எழுத்தாளர் அனுமதியுடன் மேம்படுத்தவும் வல்லினம் குழுவினருக்கு அனைத்துச் சுதந்திரமும் உண்டு.
•இது பதிப்புத்திட்டம் என்பதால் வல்லினம் இலக்கியக் குழுமத்தினரும் தாராளமாகப் பங்கெடுக்கலாம்.
•எழுத்தாளரின் முழுவிபரங்கள் (அடையாள அட்டையில் உள்ளது போல பெயர், அடையாள அட்டை எண், தற்போதைய வீட்டு முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண்) படைப்புடன் தனித்தாளில் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
•மலேசிய மற்றும் சிங்கைப் படைப்பாளிகள் (Citizen/PR உள்ளவர்கள்) மட்டுமே பங்குப்பெற இயலும்.
•எழுதப்பட்ட குறுநாவல், ‘வல்லினம் குறுநவல் பதிப்புத்திட்டத்துக்காகத் தானே சுயமாக எழுதியது என்று போட்டியாளர்களின் கையொப்பமிடப்பட்ட உறுதிக்கடிதம் ஒன்றை உடன் இணைத்து அனுப்பவேண்டும்.
•அனுப்பப்பட்ட படைப்புகள் நூலாக்கம் செய்ய வல்லினம் முழுஉரிமை பெற்றிருக்கும். வல்லினத்தின் அனுமதியின்றி மீள்பிரசுரம் செய்யக்கூடாது.
•குறுநாவலை அனுப்ப வேண்டிய இறுதிநாள் 28 பிப்ரவரி 2018. இத்திகதிக்குப்பிறகு அனுப்பப்படும் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
Share this:

எழுதியவர் : (15-Dec-17, 4:39 am)
பார்வை : 33

மேலே