வருவானா

நீதான் மண்ணில்
நிலவென்று சொல்லியவன்,
நினைத்ததை முடித்துச் சென்றுவிட்டான்..

நிலவே
உன் கறையை
எனக்குத் தந்துவிட்டான்..

சொன்னதுபோல வருவானா,
நான்
சோர்ந்துபோக விடுவானா..

சொல்லிடு நிலவே அவனிடமே,
சீக்கிரம் வரச்சொல் என்னிடமே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Dec-17, 7:47 am)
பார்வை : 100

மேலே