நான்தேடும் அவன்

நீரில் படிந்திருக்கும்
மின்சாரமோ !

காற்றில் மறைந்திருக்கும்
ரீங்காரமோ !

நிலவில் ஒளிர்ந்திருக்கும்
பிரகாசமோ !

காலத்தில் அமர்ந்திருக்கும்
அவகாசமோ !

வானவில்லில் படர்ந்திருக்கும்
வண்ணமோ !

மனதில் பதிந்திருக்கும்
எண்ணமோ !

வில்லில் புதைந்திருக்கும்
வேகமோ !

ஆசையில் சூழ்ந்திருக்கும்
மோகமோ !

காதல் விளைந்திருக்கும்
பயிரோ !

கருவில் காத்திருக்கும்
உயிரோ !

அவன் யாரென்று அறியவில்லை !
என்ன பிறவியென்று புரியவில்லை

எழுதியவர் : ...ராஜேஷ்... (17-Dec-17, 9:57 am)
பார்வை : 349

மேலே