நான்தேடும் அவன்

நீரில் படிந்திருக்கும்
மின்சாரமோ !
காற்றில் மறைந்திருக்கும்
ரீங்காரமோ !
நிலவில் ஒளிர்ந்திருக்கும்
பிரகாசமோ !
காலத்தில் அமர்ந்திருக்கும்
அவகாசமோ !
வானவில்லில் படர்ந்திருக்கும்
வண்ணமோ !
மனதில் பதிந்திருக்கும்
எண்ணமோ !
வில்லில் புதைந்திருக்கும்
வேகமோ !
ஆசையில் சூழ்ந்திருக்கும்
மோகமோ !
காதல் விளைந்திருக்கும்
பயிரோ !
கருவில் காத்திருக்கும்
உயிரோ !
அவன் யாரென்று அறியவில்லை !
என்ன பிறவியென்று புரியவில்லை