கற்பு

எவரும் இல்லாத தருணத்திற்காக,
எட்டிப் பார்க்கிறேன்...!
விளையாட வேண்டுமென்று
ஆசை...!
ஏனோ தெரியவில்லை,
வீடு தாண்ட பயம்...!!
எதிர் வீட்டு மாமா,
பக்கத்து வீட்டு அண்ணன் - என
யாரையும் நம்ப மறுக்கிறது - மனம்
குழந்தைகள் என்பதை மறந்து,
தேக வதை செய்யும் - இந்த
கயவர்களை எண்ணி... எண்ணி...!!!
Written by JEERY