இந்த நொடி விண்மீன்

மானிடமே!
பாதையின் தூரத்தால்
பாதம் சலித்தாலும்
மனம் சலித்திடாதே, மானிடமே!

உன் உழைப்பை உறிஞ்சும்
ஒவ்வொரு நொடியும்
உன் வெற்றியை உமிழும்
வேளைக்கான படியாகுமே!

மேடை உயரவே,
படிகளும் கூடுமே!

சாட்சி கூறும் நான்...,
இந்த நொடி, உன்
இரவு வானில்
நட்சத்திரமாய்
காட்சியாகவே,
வெகுதூரம் கடந்து
வந்த ஒளிதானே..!

ஆம்,
என்னை உமிழ்ந்த விண்மீனிலிருந்து,
எத்தனையோ ஒளி ஆண்டுகள் நடந்து,
சில வளிமண்டலங்கள் ஊடுருவி,
பல வளியில்லா மண்டலங்கள் தாண்டி,
பயணித்து வந்த ஒளி நானே!
உலகிற்கு இப்போது விண்மீன் ஆனேனே!
உன்னத கூற்றிற்கு உற்ற சாட்சியும் ஆனேனே!

எழுதியவர் : (31-Dec-17, 9:07 pm)
சேர்த்தது : Nanthini S
Tanglish : intha nodi vinmeen
பார்வை : 600

மேலே