மரணம்

" நேற்றுக் கூட பார்த்தேனே; நல்லாத் தானே இருந்தான்; எப்படி இன்று இறந்தான்? ",என்ற குழப்பம் மட்டுமே பிணிக்கும் நம் வாழ்வின் முடிவில், எப்போது என்ன நிகழும்? என்பது நம்மில் பலருடைய கேள்வியாய் வாசமில்லா ரோஜக்கூட்டத்தைப் போல் துன்பம் குழி பறிக்கும் துன்மார்க்கம் வழி செல்லும் நெஞ்சில் வேஷங்கள் ஒரு கோடி..
வேதனைகள் பல கோடி...

இன்பங்களைக் காண துன்பங்கள் ஒடிவரும் கேள்விகளாய் நிலையாமை தத்துவமே நிதர்சனமாய் ஓங்கி நிற்கும்...

பாகுபட்ட நெஞ்சங்களில் பரிதவிப்பு எப்படி வரும் என்பதை அறியாது ஆசைகளில் ஓடி அலைகிறது மனது..

ஓயாத மனதிற்கு எங்கு ஓய்வு கிடைக்கும் என்றிட தேடி வந்த மரணம் தீர்க்கமாய் நின்றளிக்கிறது முக்தி...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Dec-17, 7:57 pm)
Tanglish : maranam
பார்வை : 2509

மேலே