சட்டம் யார் கையில்

சர்வாதிகார பார்வையடா! இதற்கு
சட்டம் என்றொரு போர்வையடா!
ஊழல்களின் ஓடையடா! இதில்
உண்மை அடித்து செல்லும் ஆடையடா!

உன்னைச் சுற்றி சட்டம் உண்டு!
சட்டம் தரும் திட்டம் உண்டு!
பயனாளி நீ இல்லை!
பணக்கார பெரும் முதலை!

ஏழை ரணம் கண்டதுண்டா?அவர்
கதறல் குரலைக் கேட்டதுண்டா?

நல்லவர்கள் இங்கும் உண்டு!
நீதியையும் காப்ப துண்டு!

மக்கள் பங்குபெறும் சட்டம் வரைந்தால்
யார் கையில் என்ற பயமெதற்கு!.

எழுதியவர் : ம.ஸ்ரீநிவாசன் (30-Dec-17, 9:55 pm)
சேர்த்தது : srinivasan M
Tanglish : sattam yaar kaiyil
பார்வை : 63

மேலே