வெறுப்பு
வெறுப்பின் உச்சத்தில் ஓர் பதிவு..
எது காதல்?
என்னவனின் காதலெது?
அவனையே கவிதையாய்
நான் எழுதிய போதும்
அதை படிக்ககூட விரும்பாததுதான்
அவன் காதல் போலும்..
அவனையே நொடிவிடாமல்
நினைக்கும் என்னை பற்றிய
நினைவேயில்லாமல் இருப்பதுதான்
அவன் காதல் போலும்..
அவனிடம் பேசினாலே போதும்
என்று எண்ணும்
என்னிடம் பேசாமல் இருப்பதுதான்
அவன் காதல் போலும்..
அவனை காணத்துடித்த
என்னை ஓரு நாள்
முழுவதும் காக்க
விட்டு மறுப்பதுதான்
அவன் காதல் போலும்..
அவன் கண்களில்
பாசத்தை காண
துடித்த என்னிடம்
வெறுப்பை காட்டுவதுதான்
அவன் காதல் போலும்..
இவை அனைத்துக்கும் மேல்
இன்று வாழ்வுக்கும் சாவிர்க்கும்
நடுவில் நின்று தவிக்கும்
என் நிலையறியாமல் இருப்பதுதான்
அவன் காதல் போலும்..
இன்று நான் வெறுத்தது
என் வாழ்க்கையை மட்டுமல்ல
என்னவனையும் அவன் மீது
நான் கொன்ட காதலையும் தான்..