அவள் பெயரை மட்டும் சொல்ல மாட்டேன்

தாழிட்ட அறையில்
தனிமையில் தவிக்கும்
என்னவளின்
துயர்துடைக்க
நான் எழுதும்
காதல் கடிதம்
என் பேனை முனையும்
எழுத மறுத்துவிட்டது
மை தீர்ந்ததோ...!
அல்ல
உன் பெயரெழுத
நான் தகுதியற்றவன்
என்று நினைத்ததோ
என்னவோ..?
ஏதுமறியாக் காதலன்
யாது செய்வேன்...???
மூன்றெழுத்துக் காதலை
முணகிக் கொண்டே
சொன்னாள்
மூவாயிரம்
பட்டாம்பூச்சிகள்
முகத்தில் மொய்த்தன
மூச்சடைத்துவிட்டது
ஒழிஞ்சி நின்றுகூட
பார்க்காதவள்
ஓரத்தில் நின்று
சொல்கிறாள்
நானும்
பச்சைக்கொடி காட்டி
கற்பனைக்கதை
ராமனாய்
சீதையை நோக்கினேன்
மனசு படபடக்க
இதயம் துடிதுடிக்க
மழைத்துளி
துளித்துளியாய்
கண்ணத்தை
முத்தமிட்டது
எழும்புடா
ஸுபஹுக்கு
பாங்கு சொல்றாங்க
பள்ளிக்குப் போ...!
என்று
என்னன்னையின்
பாசக்குரல்...
05/09/2015

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (3-Jan-18, 3:17 pm)
சேர்த்தது : ஜே எஸ் எம் ஸஜீத்
பார்வை : 97

மேலே